this site the web

Sunday, July 19, 2015

பச்சைத் தீ நீயடா - பாகுபலி முழு பாடல்



பாடல் வரிகள் :
பச்சை தீ நீயடா ... கச்சை பூ நானடா
ஒற்றை பார்வை கொண்டே பற்றிக்கொண்டாயடா
வெற்றுக்கல் நானடா வெட்டும் உளி நீயடா
அற்பப்பாறை என்னில் சிற்பம் செய்தாயடா

நீயே மண் மின்னும் வெண்தாரகை
உள்ளங்கை சேர்ந்த பூங்காரிகை
கைகள் நாம் கோர்க்க சிறகாகுமே
புது வானங்கள் உருவாகுமே

பச்சை தீ நீயடா ... கச்சை பூ நானடா
ஒற்றை பார்வை கொண்டே பற்றிக்கொண்டாயடா

மான் விழிக்குள் எந்தன் வாழ்வொன்றைக்காண
மாமலை ஒன்றேறி வந்தேனடி
இதயமொன்று உள்ளதென்று உன் அணைப்பாலே கண்டேனே
இனும் என்னை இறுக்கி அணைத்திடத் துடித்தேனே

நீயே மண் மின்னும் வெண்தாரகை
தோளில் வீழ்கின்ற பூங்காரிகை
உந்தன் தோளோடு தோள் சேர்க்கிறேன்
என்னில் தோகைகள் நான் பார்க்கிறேன்

பச்சை தீ நீயடா ... கச்சை பூ நானடா
ஒற்றை பார்வை கொண்டே பற்றிக்கொண்டாயடா

கீறலில் உண்டாகும் கீதங்கள் கேட்டால்
மோதலின் மோகங்கள் கேட்டாயடி
பிறவி பல எடுத்தாலும் நிகழும் கணம் நான் மறவேனே
வலிகளை வரமென தந்திட கேட்டேனே
நீயே மண் மின்னும் வெண்தாரகை
கண்ணில் தேன் சிந்தும் பூங்காரிகை
உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன்
காதல் ஆழத்தை நான் காண்கிறேன்

பச்சை தீ நீயடா ... கச்சை பூ நானடா
ஒற்றை பார்வை கொண்டே பற்றிக்கொண்டாயடா
வெற்றுக்கல் நானடா வெட்டும் உளி நீயடா
அற்பப்பாறை என்னில் சிற்பம் செய்தாயடா



MORE INTERESTING UPDATES ON THE BLOG'S FACEBOOK PAGE



Bookmark and Share

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

 

Prabhas Orkut Community

Check out our Prabhas Community in Orkut for all the latest and lots of info about Prabhas

Follow me